தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்? 

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சாங்கிய சம்பிரதாயத்திற்கு தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது வழக்கம்.

அப்படி இருக்கும் போதுநமது வீட்டிலோ அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்வாருங்கள் தெரிந்து கொள்வோம்….!!

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன் எனவும்இரண்டாம் கண் லஷ்மி எனவும்மூன்றாம் கண் சிவன் எனவும் போற்றப் படுகிறது.

இந்நிலையில் தேங்காயை நாம் பயன்படுத்தும் போதுஅது அழுகி இருப்பதுதேங்காயில் பூ வருவது, கோணலாக உடைவதுசிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவதுஇது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்களாக நாம் பார்ப்பதுண்டு.

அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போதுஅது அழுகிய நிலையில் இருந்தால்அது நமக்கு ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்துமனதில் குழப்பத்தை அளிப்பதால்இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?

ஆனால்உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால்அது நல்ல அறிகுறி என்றும்அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள்பீடைகண்திருஷ்டி போன்றவை நம்மை விட்டு விலகி போகும்எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.

தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?

நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால்அந்த வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு என்று அர்த்தமாகும்.

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?

நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால்அது நமக்கு பணவரவுஎதிர்பாராத லாபம்வீட்டில் சுபகாரியங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.


Comments